12 January 2018

திருப்பாவை 28










குறையே இல்லாத கோவிந்தனே!
நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள்.

எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும்.
உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது.
உன்னோடு எங்களுக்குள்ள உறவை  யாராலும் பிரிக்க முடியாது.
விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்!
அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா!
 என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம்.
அதற்காக கோபித்துக் கொள்ளாதே.
எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.



ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....










அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. இனிய தரிசனம்.. சிறப்பு..

    ReplyDelete
  2. வணக்கம் அனு!

    திருப்பாவையும் அதன்பொருளும் தேனென இனித்தது!

    நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆஹா மிக துலக்கமான மனதை அள்ளும் படங்கள்.

    ReplyDelete
  4. அனு கண்ணாடி சேவை அருமை....ஒவ்வொரு நாளும் பாவைக்கேற்ப இல்லையா...

    தினமும் மாற்றுவார்கள் போலும்

    கீதா

    ReplyDelete
  5. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete