08 January 2018

திருப்பாவை 24














மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம்.

ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம்.

சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.

கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.

பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம்.

உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.



ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....









அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. மார்கழி எல்லா நாட்களும் திருப்பாவை விளக்கம் அருமை அனுராதா மேடம்

    ReplyDelete
  2. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி..

    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  3. தரிசித்து விட்டேன், மேலே போட்டிருக்கும் கிளேயில் செய்த புத்தர் சிலை கொள்ளை அழகு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரா...இங்க ஒரு பொருட்காட்சியில் எடுத்த படம்...வித விதமா புத்தர் சிலைகள் இருந்தது....விரைவில் அப்படங்களை பதிவிடுகிறேன்

      Delete
  4. பாசுரத்திற்கான விளக்கமும் படங்களும் அழகு. நன்றி.

    ReplyDelete