07 October 2017

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா திருக்கோவில் , பெங்களுரு...

அன்பின் வணக்கங்கள்....

இன்றைய ஆலய தரிசனத்தில்

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா திருக்கோவில், சிக்க திருப்பதி, பெங்களுரு...

சிக்க திருப்பதி ...இந்த  ஊர் பெங்களூரில்  Sarjapur என்ற இடத்தில் உள்ளது ....இந்த இடம் silk  board இல் இருந்து 33 km தொலைவில் உள்ளது ......











தல வரலாறு


ஒருமுறை அக்னி தேவர்  கடுமையான வயிற்று வலி  நோயால்
பாதிக்கப்பட்டார் .


அப்போது பிரம்மா அவர் உடல்நலத்தை  குணப்படுத்த மூலிகை நிறைந்த 'Khandava' வனத்தை  நுகருமாறு  அக்னி தேவருக்கு அறிவுறுத்தினார்... .


 ஆனால் அந்த வனத்தில்   சர்ப்ப-ராஜாவாகியா  இந்திரனின்  நெருங்கிய நண்பர் தக்ஷகன், வசித்தார் .

 அக்னி காட்டை  நுகர முயன்ற போதெல்லாம், இந்திரன் இடியுடன் கூடிய மழையை பெய்வித்தார் .....அதனால் அக்னியால் அந்த காட்டை நுகர இயலவில்லை...


பின் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் உதவியுடன், அக்னி 'Khandava' வனத்தை  எடுத்துக்கொண்டார் .

 அந்த நேரத்தில்   காட்டில் இருந்த தக்ஷகன்  தீயில் காயமடைந்தார்... ...

அதனால் கோபமான தக்ஷகன் அக்னியை  சபித்தார்...அதனால் அக்னி  தன்  தேஜஸ்க்களை (பிரகாசம்) இழந்தார்...


இந்த சாபத்தில் இருந்து விமோசனம்  பெற,  அக்னி தேவர் ,  இந்த வெங்கடேஸ்வரா கோயிலை எழுப்பினார் .

 எனவே தான் இங்கே இறைவன்  பிரசன்ன வெங்கடேஸ்வர்  என்று அழைக்கப்படுகிறார் ..












கருடன்

ஆண்டாள்






"சிக்க' என்றால் கன்னடத்தில்  சிறிய என்று பொருள்...எனவே இக்கோவிலை  சின்ன திருப்பதி எனவும் கூறலாம் ..

கோயில்  காலை 6 மணி  முதல்   முற்பகல் வரையும் பின்  மாலையும் திறந்திருக்கும்.


ஏற்கனவே இவ்வாலயத்தை பற்றி எனது
 தளத்தில் பதிந்தது உள்ளேன்....

இன்று மீண்டும் ஒரு முறை....அழகிய படங்களுடன்...


அன்புடன்
அனுபிரேம்..





6 comments:

  1. புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சி நன்றி சகோ

    ReplyDelete
  2. படங்கள் அருமை சகோதரியாரே

    ReplyDelete
  3. புகைப்படங்கள் தகவல்கள் அருமை அனு

    கீதா

    ReplyDelete
  4. அழகிய சிற்ப வேலையுடன் கூடிய கோயில்.. அருமையாக இருக்கு பார்க்க.

    ReplyDelete
  5. ஆகா..
    காலையில் இனிய தரிசனம்.. பெருமாளே சரணம்!..

    ReplyDelete
  6. பளிச்... சுத்தமான கோவில்...

    ReplyDelete