சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர்)
இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.
முன்பு இத்திருத்தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.
மூலவர் : சாரநாதப் பெருமாள்
தாயார் : சாரநாயகி - பஞ்சலெட்சுமி
தீர்த்தம் : சார புஷ்கரிணி