25 November 2016

ஆரோவில் (Auroville ) --- புதுச்சேரி

அனைவருக்கும் வணக்கம்....



புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  ).. யை  இதுவரை ரசித்தோம்,,,,


இன்று காண இருப்பது  உதய நகரத்தை....


பாண்டிச்சேரி  நகரத்திலிருந்து   8 கிமீ   தொலைவில்   அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும்     ஆரோவில்  நகரம்   சர்வதேச  புகழ் பெற்ற நகரம்.  உலகம்   ஒன்றுதான்   என்பதை உணர்த்தும் வகையில்    124 நாடுகளில் இருந்து மண்   எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர்.





''மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே " ஆரோவில்லின் நோக்கமாகும் 'என்ற பிரகடனத்தோடு  ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம்   திருக்கனவில் உதித்ததாகும்.

'பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது 'என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.

பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது.


நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (அமைதி) என்று பெயர்.






மையப்பகுதிக்கு  செல்லும் வழி..






அழகிய குடில்..





மைய பகுதி....golden globe ..மாத்ரி மந்திர் ...

 நாங்கள் சென்றது மாலை மயங்கும் நேரத்தில்  ..அப்பொழுது இந்த மைய பகுதி பார்ப்பதற்கு....தக தக வென...மிகவும்   ஜொலித்தது
...





அங்கே வைக்கப் பட்டிருந்த  கல்வெட்டில் ஆரோவிலின் வரலாறு....









ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.



தொடரும்...


ஆரோவில் (Auroville )  அன்னை 


ஆரோவில்  கடற்கரை ( aurovile beach  )..




அன்புடன்

அனுபிரேம்..


1 comment:

  1. நாங்கள் போனபோது தங்கதகடு பொருத்திக் கொண்டு இருந்தார்கள். முழுமைபெற்றதை பார்க்கவில்லை.உங்கள் பதிவில் பார்த்து விட்டேன்.படங்களும் விவரங்களும் அருமை.

    ReplyDelete